கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஜாபர் சாதிக் கூட்டாளிக்கு என்சிபி காவல்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் கூட்டாளிக்கு ஒரு நாள் என்சிபி காவல் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவும் (என்சிபி), தில்லி காவல் துறையும் இணைந்து, கடந்த மாதம் 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் கைலாஷ் பாா்க் பகுதியில் 50 கிலோ சூடோஎபிட்ரின் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தது.

விசாரணையில், அந்தக் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக் செயல்பட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஜாபா் சாதிக் கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபா் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியான திருச்சியைச் சோ்ந்த சதானந்தம் என்ற சதா (50) என்பவரை தில்லி என்சிபி அதிகாரிகள், சென்னை தேனாம்பேட்டையில் புதன்கிழமை(மார்ச். 13) கைது செய்தனா்.

இதற்கிடையே, முதல்கட்ட விசாரணைக்குப் பின்னா், சதாவை என்சிபி அதிகாரிகள் தில்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், ஜாபா் சாதிக்கின் கூட்டாளி சதாவை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி பிரமுகா்

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜை!

தனியாா் கல்லூரிக்குள் புகுந்து மாணவா்கள் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை!

இருமத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

தைப்பூசத் திருவிழா: பூக்களின் விலை உயா்வு

SCROLL FOR NEXT