முகப்பு
தமிழ்நாடு

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Updated On : 19 மே, 2024 at 9:47 AM
கோப்புப்படம்
பகிர்:

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை (மே 19) முதல் மே 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக  இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. 

ம்

Advertisement

இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும், இது மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழ்நாட்டை விட்டு நகர்ந்து புயலாக மாறும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.