முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்!

ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Updated On : 29 மே, 2024 at 3:06 AM
இந்திய தேர்தல் ஆணையம்
பகிர்:

தமிழகத்துக்கு கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணிக்காக ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 5 முதல் 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவை முதல் கட்ட தேர்தலில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வருகின்ற ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்காக பல்வேறு துறைகளின் அதிகாரிகளை கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.