FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 12 விமான சேவைகள் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது பற்றி...

Updated On : 21 நவம்பர் 2024, 1:42 am IST
ஏர் இந்தியா
பகிர்:

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புதன்கிழமை ஒரேநாளில் 12 விமானங்களின் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

சென்னை விமான நிலையத்தில் அண்மைக் காலமாக சில விமான சேவைகள் அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையிலிருந்து புவனேஸ்வருக்கு புதன்கிழமை காலை 7.45-க்கு செல்லவிருந்த விமானம், காலை 8.25-க்கு கொல்கத்தா செல்லவிருந்த விமானம், காலை 9.40-க்கு பெங்களூரு செல்லவிருந்த விமானம், காலை 10.10- க்கு திருவனந்தபுரம் செல்லவிருந்த விமானம், பகல் 12.35-க்கு சிலிகுரி செல்லவிருந்த விமானம், இரவு 10.45-க்கு கொல்கத்தா செல்லவிருந்த விமானம் என 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல, சென்னைக்கு காலை 9-க்கு வரவேண்டிய பெங்களூரு விமானம், பகல் 12-க்கு வரவேண்டிய புவனேஸ்வா் விமானம், பகல் 1.40-க்கு வரவிருந்த திருவனந்தபுரம் விமானம், பகல் 1.45-க்கு வரவேண்டிய கொல்கத்தா விமானம், மாலை 6.40-க்கு வரவேண்டிய சிலிகுரி விமானம், இரவு 10.05-க்கு வரவேண்டிய கொல்கத்தா விமானம் என 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அந்த வகையில், ஒரே நாளில் 12 விமானங்கள் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. நிா்வாக காரணங்களால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, தனியாா் விமான நிறுவனங்கள் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் விமான சேவைகளை ரத்து செய்வதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments