தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பயன்படுத்துமாறு கடற்படைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல் கட்டமாக மன்னார் துறைமுகத்தில் உள்ள 5 படகுகள், மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள 8 படகுகள் இலங்கை கடற்படை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் இந்த உத்தரவால், தமிழக மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.