முகப்பு
தமிழ்நாடு

முரசொலி செல்வம் மறைவு: கண்ணீர்விட்டு அழுத முதல்வர்!

முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர்.

Updated On : 10 அக்டோபர் 2024, 8:05 pm IST
பகிர்:

சென்னை கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம்(வயது 84) வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து, சென்னை கோபாலபுரத்திற்கு கொண்டு வரப்பட்ட முரசொலி செல்வத்தின் உடல், கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்து இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments