எடப்பாடி பழனிசாமி.  
தமிழ்நாடு

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திச் சேவை

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, இன்றைய தினம் அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

தமிழக மக்களின் ஜீவாதார பிரச்னையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் முதல்வர் ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தின் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது. திமுக தலைமை தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களின் குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுக-வின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை

இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

AIADMK General Secretary Edappadi Palaniswami has stressed that Tamil Nadu's rights in the Cauvery should be protected.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதீஷ் குமாரை பதவி நீக்க சதி! மகா கூட்டணி கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை!

இது பெண்களுக்கான அரசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அகமதாபாத்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து- 35 பேர் மீட்பு

பெங்களூர் சின்னசாமி திடலில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள்! நற்பெயருக்காக அனுமதி: டி.கே. சிவக்குமார் பேச்சு!

முக்கியமான வீரர்களை பஞ்சாப் கிங்ஸ் விடுவிக்க காரணம் என்ன? ரிக்கி பாண்டிங் விளக்கம்!

SCROLL FOR NEXT