சிதம்பரம் நடராஜர் கோயில். 
தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்துக்கு ஜன. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

கடலூர் மாவட்டத்துக்கு வரும் ஜன. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

கடலூர் மாவட்டத்துக்கு வரும் ஜன. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி ஆருத்ரா தரிசனம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

இங்கு, மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் ஜனவரி 3-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதனால், கடலூர் மாவட்டத்துக்கு வரும் ஜன. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையானது கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை (பிப்ரவரி 14) பணி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

A local holiday has been declared for Cuddalore district on January 3rd.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு!

2025 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! புகைப்படங்களாக!!

"Vijay ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது": செங்கோட்டையன் | TVK

முதல் கிறிஸ்துமஸ் உரையில் காஸாவை நினைவுகூர்ந்த போப் 14 ஆம் லியோ!

என்ன செய்கிறார் அழகு நட்சத்திரம் மோனலிசா போஸ்லே?

SCROLL FOR NEXT