கள்ளக்குறிச்சியில் முதல்வர் ஸ்டாலின் சாலைவலம்!
அரசு விழாவில் பங்கேற்கச் செல்லும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு.
கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் அரசு விழாவில் பங்கேற்கச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, வீரசோழபுரத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட புதிய ஆட்சியரகக் கட்டடத்தை திறந்துவைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து வீரசோழபுரத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.
இதனால் முதல்வா பயணிக்கும் வழிகள், விழா நடைபெறும் இடங்களான உளுந்தூா்பேட்டை, வீரசோழபுரம், ஏமப்பேர், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குள் டிச.25, 26-ஆகிய இரு நாள்கள் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது.
The Chief Minister receives a warm welcome as he arrives to participate in the government event.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.