FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு! புதிய உச்சத்தில் தங்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை தொடர்பாக...

Updated On : 26 டிசம்பர் 2025, 9:45 am IST
தங்கம் விலை உயர்வு
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 25) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. டிச.22-இல் சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.1 லட்சத்து 560-க்கும், டிச.23-இல் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2,160-க்கும் விற்பனையானது.

டிச.24-இல் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,800-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, நேற்று(டிச. 25) வியாழக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ரூ. 1,02,560-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 12,820-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 12,890-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு

சூரிய மின் தகடு, பேட்டரிகள், மின் வாகனங்கள் உள்ளிட்ட மின்சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 254-க்கும், கிலோவுக்கு ரூ. 9,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 2,54 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

In Chennai, the price of gold jewellery has increased by Rs. 560 per sovereign today (December 25), reaching a new high.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments