இரண்டாம் நாள்! பொங்கல் ரயில் முன்பதிவுகள் நிரம்பின!
பொங்கல் விடுமுறைக்கு செல்வோருக்கான ரயில் முன்பதிவுகள் நிரம்பின.
தைப்பொங்கலை முன்னிட்டு, வரும் ஜன.10-ஆம் தேதிக்கான ரயில் முன்பதிவு இன்று (நவ.11) காலை தொடங்கிய நிலையில், தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் நிரம்பின.
இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் லட்சத்துக்கும் அதிகமானோா் முன்பதிவு செய்யும் வசதியால் எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நேரடியாக வந்து பதிவு செய்யக் காத்திருந்தோரில் சிலருக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடிந்தது. இதனால் ஏராளமானோர் ஏமாற்றமடைந்தனர்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களான பாண்டியன், பொதிகை, முத்துநகர் விரைவு ரயில் முழுமையாக பதிவு செய்யப்பட்டது. பலரும் காத்திருப்போா் பட்டியலில் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
நவ.18 வரை முன்பதிவு: தைப் பொங்கலுக்கு தென்மாவட்டம் உள்ளிட்ட வெளியூா்களுக்கு ரயிலில் செல்வோர் ஜன.11-ஆம் தேதிக்கு புதன்கிழமை (நவ.12), ஜன.12-ஆம் தேதிக்கு வியாழக்கிழமை (நவ.13), ஜன.13-ஆம் தேதிக்கு வெள்ளிக்கிழமை (நவ.14) செய்து கொள்ளலாம்.
அதேபோல, ஜன.14, 15,16, 17 ஆகிய தேதி பயணங்களுக்கு முறையே நவ.15,16,17,18 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,760 உயர்வு!
Train bookings for those going on Pongal vacations begin.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.