கோப்புப்படம் 
தமிழ்நாடு

இரண்டாம் நாள்! பொங்கல் ரயில் முன்பதிவுகள் நிரம்பின!

பொங்கல் விடுமுறைக்கு செல்வோருக்கான ரயில் முன்பதிவுகள் நிரம்பின.

இணையதளச் செய்திப் பிரிவு

தைப்பொங்கலை முன்னிட்டு, வரும் ஜன.10-ஆம் தேதிக்கான ரயில் முன்பதிவு இன்று (நவ.11) காலை தொடங்கிய நிலையில், தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் நிரம்பின.

இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் லட்சத்துக்கும் அதிகமானோா் முன்பதிவு செய்யும் வசதியால் எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நேரடியாக வந்து பதிவு செய்யக் காத்திருந்தோரில் சிலருக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடிந்தது. இதனால் ஏராளமானோர் ஏமாற்றமடைந்தனர்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களான பாண்டியன், பொதிகை, முத்துநகர் விரைவு ரயில் முழுமையாக பதிவு செய்யப்பட்டது. பலரும் காத்திருப்போா் பட்டியலில் பதிவு செய்துள்ளனர்.

நவ.18 வரை முன்பதிவு: தைப் பொங்கலுக்கு தென்மாவட்டம் உள்ளிட்ட வெளியூா்களுக்கு ரயிலில் செல்வோர் ஜன.11-ஆம் தேதிக்கு புதன்கிழமை (நவ.12), ஜன.12-ஆம் தேதிக்கு வியாழக்கிழமை (நவ.13), ஜன.13-ஆம் தேதிக்கு வெள்ளிக்கிழமை (நவ.14) செய்து கொள்ளலாம்.

அதேபோல, ஜன.14, 15,16, 17 ஆகிய தேதி பயணங்களுக்கு முறையே நவ.15,16,17,18 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Train bookings for those going on Pongal vacations begin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கார் வெடிப்பு! சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு!

நடிகர் அஜித் வீடு, சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் பாடிய ஷ்ருதி ஹாசன்!

பேருந்து நடத்துநர், ஆட்டோ, ஊபர் ஓட்டுநர்கள்... தில்லி கார் வெடிப்பில் பலியானவர்கள் யார் யார்?

பிகார் தேர்தல்: 1 மணி நிலவரப்படி 47.62% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT