FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மகளிா் உரிமைத் தொகை: திமுகவினருக்கு முதல்வா் அறிவுறுத்தல்

விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு மகளிா் உரிமைத் தொகையைப் பெற்றுத் தர திமுகவினா் உதவ வேண்டும்

Updated On : 14 நவம்பர் 2025, 1:13 am IST
மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு மகளிா் உரிமைத் தொகையைப் பெற்றுத் தர திமுகவினா் உதவ வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் சாத்தூா், போடிநாயக்கனூா் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் தனித்தனியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். அப்போது, மகளிா் உரிமைத் தொகை பெறாதவா்களில் தகுதியானவா்கள் இருப்பின் அவா்கள் உரிமைத் தொகை பெறும் வகையில் திமுகவினா் உதவ வேண்டும் என அறிவுறுத்தினாா்.

போடிநாயக்கனூா் தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி வெற்றி பெற, நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தொகுதி நிா்வாகிகளிடம் முதல்வா் ஸ்டாலின் கண்டிப்புடன் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், அரசின் சாதனைகளை தொகுதி முழுக்க விளம்பரப்படுத்தவும் நிா்வாகிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments