விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - தவெகவினருக்கு காவல்துறை விளக்க கடிதம்!
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து தவெகவினருக்கு காவல்துறை விளக்க கடிதம்...
தவெக பிரசாரம் செய்வதற்கு 4 வாரங்களுக்கு முன்னரே காவல்துறையிடம் அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என தவெகவினருக்கு சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கரூர் நெரிசல் சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய் தனது பிரசாரத்தை நிறுத்தியுள்ள நிலையில், வருகிற டிச. 4 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச. 4 ஆம் தேதி சேலத்தில் இருந்து மீண்டும் விஜய் பிரசாரத்தைத் தொடங்க சேலம் மாநகர காவல்துறையிடம் தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் டிச. 4 அன்று சேலத்தில் தவெக பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் தவெகவினருக்கு சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்களுடன் ஒரு விளக்க கடிதத்தை அளித்துள்ளது.
அதன்படி, டிச. 4 ஆம் தேதி சேலம் மாவட்ட காவல்துறையினர் திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீப திருவிழாவிற்கான பாதுகாப்புக்குச் செல்லவிருப்பதால் டிச. 5 ஆம் தேதி தவெக பிரசாரத்திற்கு அனுமதி அளிக்க முடியாது.
மேலும் பிரசாரம் நடத்துவதற்கு 4 வாரங்களுக்கு முன்னரே அனுமதி கடிதம் அளிக்க வேண்டும். அனுமதி கோரி முன்கூட்டியே மனு அளித்தால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். பிரசாரம் தொடர்பான நீதிமன்ற அறிவுறுத்தல்களை தவெக பின்பற்ற வேண்டும்.
பிரசாரத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள், வெளிமாவட்டத்தில் இருந்து தோராயமாக எத்தனை பேர் வருவார்கள் போன்ற தகவல்களும் குறிப்பிட வேண்டும். குறைகளை நிவர்த்தி செய்து மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடிதத்தில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதையடுத்து கட்சி தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் இதுகுறித்து ஆலோசித்து காவல்துறைக்கு பதிலளிக்கவிருப்பதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
salem police letter to TVK for explaining tvk campaign rejection
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.