முகப்பு
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: அதிகாரிகளை கடிந்துகொண்ட செல்வப் பெருந்தகை

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து அதிகாரிகளை கடிந்துகொண்டார் செல்வப் பெருந்தகை

Updated On : 22 அக்டோபர் 2025, 4:30 pm IST
செல்வப் பெருந்தகை
பகிர்:

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது குறித்து, அதிகாரிகளை கடிந்துகொண்டார் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை.

செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்ய வந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப் பெருந்தகை, அரசு அதிகாரிகளே மக்கள் பிரதிநிதிகளாக மாறி வருகின்றனரா ? இத்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியவில்லை? என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அதன் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல் கட்டமாக நேற்று 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 500 கன அடி நீர் ஏரியின் பாதுகாப்பு கருதி திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் இன்று இதனை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப் பெருந்தகை ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள அதிகாரியிடம் நிலைமையை கேட்டறிந்தார்.

அப்போது மக்கள் பிரதிநிதியான என்னிடம் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரியும் தகவலோ ஆலோசனையோ தெரிவிக்கவில்லையே ? அதிகாரிகளே மக்கள் பிரதிநிதிகளாக செயல்படுகின்றீர்களா? ஏதாவது பிரச்சினை என்றால் பொதுமக்களிடம் நிற்பது நாங்கள் தானே ? என்பது போன்ற கேள்விகளை கேட்டார்.

மேலும் இத்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியவில்லை எனவும் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

summary

Selva Peruthakai reprimands officials over opening of Chembarambakkam lake

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments