விஜய் அரியலூர் செல்வதில் தாமதம்!
காலதாமதமாகும் விஜய்யின் பயணம்... அரியலூரில் பரப்புரை!
அரியலூர்: திருச்சியில் மக்களைச் சந்தித்து பரப்புரையில் ஈடுபட்ட பின், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் அரியலூர் வந்தடைந்தார்.
எனினும், தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் செல்வதற்கு தாமதமாகி வருகிறது. அங்கு திரளான தொண்டர்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க நெடுநேரமாக காத்திருக்கின்றனர். விஜய் அரியலூருக்குச் செல்வதில் தாமதமானதால் அவர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு எப்போதுதான் வரப் போகிறார் என்று முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது. எனினும், காத்துக்கிடக்கும் தொண்டர்களிடம் உற்சாகம் குறைந்தபாடில்லை.
முன்னதாக, திருச்சியில் சனிக்கிழமை(செப். 13) பிற்பகல் பிரசாரத்தை தொடங்கிய விஜய், அங்கிருந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அரியலூா் வந்தார். இதனைத்தொடா்ந்து அங்கிருந்து, கல்லங்குறிச்சி சாலை வழியாக புறவழிச்சாலை சென்று பெரம்பலூா் மாவட்டம் குன்னம் செல்ல உள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.