ஏப். 8, 9ல் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் இபிஎஸ் பிரசாரம்?
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யவிருப்பது பற்றி...
ஏப். 8, 9 தேதிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
தொடர்ந்து சென்னையின் ஆலந்தூர், தாம்பரம், ஆர்.கே. நகர், திருவொற்றியூர் பகுதிகளில் பிரசாரம் செய்த அவர், பின்னர் நாகர்கோவில், ராதாபுரம், கடையநல்லூர், கோவில்பட்டி, சிவகாசி, பரமக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
Advertisement
இன்று காலை எடப்பாடி பேரவைத் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த இபிஎஸ், தற்போது பெரம்பலூரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஏப். 8, 9 தேதிகளில் சென்னையில் இபிஎஸ் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
ஏப். 8 ஆம் தேதி வேளச்சேரி, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தி.நகர், அண்ணா நகர், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும்
ஏப். 9 ஆம் தேதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, ராயபுரம், துறைமுகம், திருவிக நகர், எழும்பூர் ஆகிய பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.