விஜய் பிரசாரத்தில் விபத்து: தவெகவினர் 11 பேர் மீது வழக்கு!
நெல்லை, தூத்துக்குடியில் தவெக பிரசாரத்தின்போது, ஏற்பட்ட விபத்துகள் தொடர்பாக 11 பேர் மீது வழக்கு
நெல்லை, தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட விபத்துகள் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 23 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தலையொட்டி, தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் புதன்கிழமையில் விஜய் தலைமையில் தவெக பிரசாரம் நடைபெற்றது.
Advertisement
இந்த நிலையில், விஜய் பங்கேற்ற நெல்லை, தூத்துக்குடி பிரசாரங்கள் சிறு விபத்துகளும் ஏற்பட்டன. இதனையடுத்து, விபத்துகள் தொடர்பாக, கட்சி நிர்வாகிகள் 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.