சட்டப்பேரவையில் விசில் அடிக்க முடியாது: திருமாவளவன்
சட்டப்பேரவையில் விசிலடிக்க முடியாது என தவெகவை விமர்சித்து தேமுதிகவுக்கு திருமாவளவன் வாக்கு சேகரிப்பு
சட்டப்பேரவையில் விசிலடிக்க முடியாது என தவெகவை விமர்சித்து தேமுதிகவுக்கு திருமாவளவன் வாக்கு சேகரித்தார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, "இப்போது விசிலடிக்கும் தோழர்கள் வந்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் சென்று விசிலடிக்க முடியாது. தியேட்டரில்தான் விசிலடிக்க முடியும். எனவே, அவர்களை மீண்டும் தியேட்டருக்கே அனுப்புங்கள். ஒரு வாக்குகூட சிந்தக் கூடாது; சிதறக் கூடாது.
சினிமா மோகத்தால், தலித் இளைஞர்களெல்லாம் விஜய் பின்னால் செல்வதாகக் கூறுகின்றனர். அப்படிப் போகிறார்களா? தீவிர மயக்கம் கொண்டார்களா?
Advertisement
நீங்கள் கொள்கை வாரிசுகள்தானே? புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசுகள்தானே?
நமக்கு சினிமா மோகம் ஒருபோதும் கிடையாது என்பதை இந்தத் தேர்தலில் நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி, ஓர் ஊராட்சி மன்றத் தலைவராகக்கூட தகுதியில்லாதவர் என பாமக தலைவர் அன்புமணி கூறினார். இந்தத் தொகுதியில் உடைந்த பாமகதான் போட்டியிடுகிறது. ஆகையால், வெற்றி உறுதியாகி விட்டது" என்று தெரிவித்தார்.