சட்டப்பேரவையில் விசில் அடிக்க முடியாது: திருமாவளவன்
சட்டப்பேரவையில் விசிலடிக்க முடியாது என தவெகவை விமர்சித்து தேமுதிகவுக்கு திருமாவளவன் வாக்கு சேகரிப்பு
சட்டப்பேரவையில் விசிலடிக்க முடியாது என தவெகவை விமர்சித்து தேமுதிகவுக்கு திருமாவளவன் வாக்கு சேகரித்தார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, "இப்போது விசிலடிக்கும் தோழர்கள் வந்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் சென்று விசிலடிக்க முடியாது. தியேட்டரில்தான் விசிலடிக்க முடியும். எனவே, அவர்களை மீண்டும் தியேட்டருக்கே அனுப்புங்கள். ஒரு வாக்குகூட சிந்தக் கூடாது; சிதறக் கூடாது.
சினிமா மோகத்தால், தலித் இளைஞர்களெல்லாம் விஜய் பின்னால் செல்வதாகக் கூறுகின்றனர். அப்படிப் போகிறார்களா? தீவிர மயக்கம் கொண்டார்களா?
Advertisement
Advertisement
நீங்கள் கொள்கை வாரிசுகள்தானே? புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசுகள்தானே?
நமக்கு சினிமா மோகம் ஒருபோதும் கிடையாது என்பதை இந்தத் தேர்தலில் நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி, ஓர் ஊராட்சி மன்றத் தலைவராகக்கூட தகுதியில்லாதவர் என பாமக தலைவர் அன்புமணி கூறினார். இந்தத் தொகுதியில் உடைந்த பாமகதான் போட்டியிடுகிறது. ஆகையால், வெற்றி உறுதியாகி விட்டது" என்று தெரிவித்தார்.
Criticizing the TVK by stating that one cannot blow whistles in the Legislative Assembly, VCK Leader Thirumavalavan campaigns for the DMDK.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.