கிளாம்பாக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி!
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை: சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாமல் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று சொந்த ஊர் சென்று வாக்கு செலுத்த நேற்று இரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
ஆனால், போதிய பேருந்து வசதி இல்லாததால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
Advertisement
திருச்சி, மதுரைக்கு போதிய அளவு பேருந்துகள் இல்லை எனவும் அதிகாலை முதல் பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாகவும், சொந்த ஊர் செல்லாமல், சென்னை திரும்பும்நிலை இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.