சென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!
சென்னையின் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டில் மழை பெய்திருப்பது பற்றி..
தமிழ்நாட்டில் இன்று பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையின் அண்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
சென்னைக்கு அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மாலை மழை பெய்திருக்கிறது. செங்கல்பட்டின் கூடுவாஞ்சேரி, நந்திவரம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்திருக்கிறது.
திருவள்ளூரிலும் இன்று மாலை மழை பதிவாகியிருக்கிறது. திருவள்ளூர், திருப்பாச்சூர், ஈக்காடு, மணவாள நகர், அரண்வாயல் உள்ளிட்டப் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.