எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
முதலில் மறுப்பு; பிறகு சம்மதம்!
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்படும் உதயநிதி!
தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தஞ்சை தெற்கு நகர காவல் நிலையத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
காவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்
காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஆகஸ்ட் 4) கேள்வி எழுப்பியுள்ளார்.
த்ரிஷா என்ன பிரதமரா? - திமுக கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து பேசிய திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி, த்ரிஷா என்ன பிரதமரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றே விடுவிக்க வேண்டும்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைஉத்தரவிட்டுள்ளது.
உதயநிதிக்கு மதிய உணவு
விழுப்புரம் காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மதிய உணவை காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பெண்கள் பற்றி உதயநிதி பேசியது சரியா? பதிலளிக்காமல் சென்ற மேயர் பிரியா!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு சென்னை மேயர் பிரியா கண்டனம் தெரிவித்த நிலையில், 'பெண்கள் பற்றி உதயநிதி பேசியது சரியா?' என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.
மக்களைத் தாக்கும் திமுகவினர்!
பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள் என அமைச்சர் ராஜ்மோகன் பதிவிட்டுள்ளார்.
விசாரணை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் கைது: சேலத்தில் திமுகவினர் சாலை மறியல்!
அன்புமணி கண்டனம்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கும், அவர் மீதான கைது நடவடிக்கைக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக போராட்டம்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைதைக் கண்டித்து தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.
காமெடியாக பார்க்கிறேன்
கைது நடவடிக்கையை காமெடியாக பார்ப்பதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் குறித்து விமர்சனம்! உதயநிதி கைது!
தஞ்சையில், முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததாகத் தொடரப்பட்ட புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தஞ்சை காவல்துறை கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளா? ஜோதிமணி கடும் கண்டனம்
அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளா என்று உதயநிதி பேச்சுக்கு ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு
நடிகை த்ரிஷாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா? உதயநிதியை விமர்சித்த அண்ணாமலை!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை விமர்சித்து முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு.
உதயநிதி ஸ்டாலின் கைது?
முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தவெக அமைச்சர்கள் கண்டனம்
முதல்வர் விஜய்க்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து தவெக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.