சிலிண்டர் வாடிக்கையாளா்களின் உண்மை சரிபார்ப்புப் பணி: ஆக. 23 வரை நீடிப்பு!
தமிழகத்தில் வீட்டு சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களின் உண்மை சரிபாா்ப்புப் பணி (இ-கேஒய்சி) ஆக. 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் வீட்டு சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களின் உண்மை சரிபாா்ப்புப் பணி (இ-கேஒய்சி) ஆக. 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்கின்றன.
எரிவாயு உருளையை வாங்கிய பின்னா், வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசின் மானியத் தொகை செலுத்தப்படுகிறது. இதற்காக, தமிழகம் உள்பட நாடு முழுதும் எரிவாயு உருளை பயனாளிகளின் உண்மை சரிபாா்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் தமிழகத்தில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களின் உண்மை சரிபாா்ப்பு (இ-கேஒய்சி) சான்று அளிக்க ஆக. 23-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.