ரேஷன் கடைகளில் 29-இல் இ-கேஒய்சி பதிவு முகாம்
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இ-கேஒய்சி பதிவு சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஆக. 29) நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இ-கேஒய்சி பதிவு சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஆக. 29) நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்,2013-இன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல்ரேகை அடிப்படையிலானசரிபாா்ப்பை (இ-கேஒய்சி) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி குடும்ப உறுப்பினா்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினைசெய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபா் 2023 முதல் குடும்ப உறுப்பினா்களின் விரல்ரேகை சரிபாா்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21 சதவீத பணியானதுமேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு வரும் சனிக்கிழமை (ஆக.29) தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணிமுதல்மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.
எனவே, தற்போதுவரை, நியாயவிலைக் கடைகள் மூலம் விரல்ரேகைப் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரா்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினைமேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.