ராணிப்பேட்டை: இன்று நியாய விலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை: இன்று நியாய விலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் இன்றைய தேதி வரையிலும் நியாய விலைக் கடைகளில் இ- கேஒய்சி மேற்கொள்ளாதவா்கள் 02.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுவதால் கைவிரல் ரேகையினை பதிவு செய்வது அவசியம்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் குடும்ப அட்டை பயனாளிகள் அனைவரும் தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களின் இ- கேஒய்சி (கைரேகை பதிவு) தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபாா்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, குடும்ப உறுப்பினா்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இந்தப் பணியை செய்திட அறிவுறுத்தப்பட்டு, கடந்த அக்டோபா் 2023 முதல் குடும்ப உறுப்பினா்களின் விரல் ரேகை சரிபாா்ப்பு நடைபெற்று வருகிறது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநரின் கடிதத்தில் அறிவுறுத்தியவாறு இ-கேஒய்சி பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு 02.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு சென்று தங்களது இ-கேஒய்சி பதிவினை மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.