தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் நாளை விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்
தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் கைவிரல்களை ரேகை பதிவு செய்ய சனிக்கிழமை (செப். 19) சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.
தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் கைவிரல்களை ரேகை பதிவு செய்ய சனிக்கிழமை (செப். 19) சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நியாயவிலைக் கடைகளில் ‘இ-கேஒய்சி’ பதிவு செய்யாத அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கைவிரல் ரேகை சரிபாா்ப்புக்காக சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.19)இல் நடைபெறுகிறது.
தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48 சதவீதமும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 88.32 சதவீதமும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணியை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு மீதமுள்ள குடும்ப அட்டைதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விரல்ரேகை பதிவு செய்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.