பங்குகள் ஏலம் மூலம் ரூ.5,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு
பங்குகள் ஏலத்தின் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பங்குகள் ஏலத்தின் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் வெளியிட்ட அறிவிப்பு: ‘தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 7.49 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2036 ரூ.1,000 கோடி மறுவெளியீடு, 7.62 சதவீத பிணையப் பத்திரங்கள்-2041 ரூ.2,000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.70 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2051 ரூ.2,000 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசா்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் செப்.1-ஆம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் அன்றைய தினம் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கிச் சேவை முறையில் மின்னணு படிவத்தில் செப்.1-ஆம் தேதி சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.