பாதுகாப்பை மீறி... முதல்வர் விஜய்யின் வாகன அணியில் புகுந்த தொண்டர்!
முதல்வர் விஜய்யின் வாகன அணியில் தொண்டர் புகுந்தது பற்றி...
கரூரில் பாதுகாப்பை மீறி முதல்வர் ஜோசப் விஜய்யின் வாகன அணியில் புகுந்த தவெக தொண்டரால் பதற்றம் ஏற்பட்டது.
முதல்வரான பிறகு முதல்வர் விஜய் இன்று முதல்முறையாக கரூர் செல்கிறார். கடந்த ஆண்டு கரூர் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கவுள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்வர் ஜோசப் விஜய், சாலை வழியாக கரூர் சென்றார்.
Advertisement
Advertisement
கரூர் செல்லும் வழியில் ஆங்காங்கே தவெகவினரும், மக்களும் கூடி முதல்வர் விஜய்யின் கார் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.
திருச்சியிலிருந்து கரூர் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஆங்காங்கே காரை மெதுவாக இயக்கி, மக்களின் வரவேற்பை முதல்வர் ஏற்றார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் வாகன அணிக்குள் பாதுகாப்பை மீறி, தொண்டர் திடீரென்று உள்ளே நுழைந்ததால் பதற்றம் நிலவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், உடனடியாக தவெக தொண்டரை அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர்.
Breaching security... a party worker infiltrated Chief Minister Vijay's convoy!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.