ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன்! தங்க மோதிரம் திட்டம் எப்போது? விஜய் தகவல்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பற்றி கரூரில் முதல்வர் விஜய் பேசியது...
வருகிற செப். 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அறிமுகப்படுத்தப்படும் என்று கரூரில் முதல்வர் விஜய் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக கரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஜோசப் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில் தவெக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பற்றி பேசினார்.
Advertisement
Advertisement
"வருகிற செப். 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் உங்கள் அண்ணனுடைய அரசில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அறிவிக்கப்படும். வாக்குறுதிகள் கொடுத்தார்களே என்ன ஆச்சு? என்று கேட்டார்கள். இப்போது அறிவிக்கிறோம். தீய சக்தி மாதிரி ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன்"
முதல்வர் வாயைத் திறங்க என்று பேசினார்கள். ஆனால் பேசினால் ஓடிவிடுகிறார்கள்" என்று பேசினார்.
CM vijay announcement about Thaimaman Gold Ring scheme
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.