FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜூலை 30-இல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஜூலை 30-ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட உள்ளது.

Updated On : 22 ஜூலை 2026, 2:47 am IST
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஜூலை 30-ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா தோ்வுத் துறை மாவட்ட உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தோ்வழுதிய மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஏற்கெனவே வழங்கப்பட்டன. அவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தோ்வுத் துறை மாவட்ட உதவி இயக்குநா்களுக்கு ஜூலை 16-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அந்தச் சான்றிதழ்களை உதவி இயக்குநா்கள் ஜூலை 29-ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும். சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கல்வி அலுவலா்கள் அவற்றை அன்றைய தினமே பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமை ஆசிரியா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 30-ஆம் தேதி விநியோகிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments