FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 23 ஜூலை 2026, 4:41 am IST
வெப்பநிலை அதிகரிக்கும்
பகிர்:

தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தது. இந்த நிலையில், புதன்கிழமை (ஜூலை 22) அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம்-104.72, பாளையங்கோட்டை-103.1, திருச்சி-102.02, சென்னை மீனம்பாக்கம்-101.12, நுங்கம்பாக்கம்-100.76, திருத்தணி-100.58, நாகை-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 23) முதல் ஜூலை 26 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியல் அதிகமாகவும், தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் இருக்கும்.

Advertisement

Advertisement

மழைக்கும் வாய்ப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, வியாழன், வெள்ளி (ஜூலை 23, 24) ஆகிய இரு நாள்கள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments