அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை: நயினார் நாகேந்திரன்
அன்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து...
அன்ணாமலை கட்சியிலிருந்து விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை பேசியுள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, அந்தக் கட்சியிலிருந்து விலகி, இன்று இது நம்ம இயக்கம் (We the leader) என்ற அமைப்பை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும், அந்தக் கட்சியில் நிரந்தர பதவி ஒழிக்கப்படும் போன்ற கருத்துகளைத் தெரிவித்தார். ஆதரவாளர்கள் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டுகோள் விடுத்தார்.
Advertisement
Advertisement
இது குறித்து தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
பாரதிய ஜனதா கட்சி இன்று, நேற்று ஆரம்பித்த கட்சி அல்ல. அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியதில் தமிழக பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் கட்சியிலிருந்து விலகியதில் கருத்து கூற முடியாது. நரேந்திர மோடி எங்கு சென்றாலும் தமிழின் பெருமையைப் பற்றி பேசுகிறார். இப்போதும் கூட, நமது செப்பேடுகளை மீட்டு வந்திருக்கிறார்.
பாஜக உலகிலேயே பெரிய கட்சி. தமிழ் மக்களின் மீது பாஜக என்றும் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. கட்சி யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஜனநாயகத்தில் அனைவருக்கும் அத்ற்கான உரிமை உண்டு. மாநில அளவிலான உரிமைகளுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு என்று தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்.