ஜூன் 18ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவது பற்றி...
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில். இதுவரை 3 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கரம் நீட்டிய காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட 35 பேர் இதில் இடம்பெற்றுள்னா்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்தாண்டு தொடக்கத்தில் திமுகவின் ஆட்சியில் இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி வருகிற ஜூன் 18 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சட்டப்பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2026-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 18-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு. சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.