சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
கோவை அருகே சிறுமி கொலை வழக்கில், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீஸார் திட்டமிட்டு உள்ளனர்.
கோவை அருகே சிறுமி கொலை வழக்கில், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீஸார் திட்டமிட்டு உள்ளனர்.
கோவை, சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி (33), அவரது நண்பர் மோகன்ராஜ் (30) ஆகியோரை சூலூர் போலீஸார் கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சக கைதிகள் தாக்கியதில் காயம் அடைந்த கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களை விசாரிக்க கைதான இருவரையும் கடந்த 3-ஆம் தேதி போலீஸார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு இருவரையும் போலீஸார் நேரில் அழைத்துச் சென்று, அவர்களின் வாக்குமூலங்களை வீடியோவில் பதிவு செய்தனர். 3 நாள் காவல் விசாரணை முடிந்து நேற்று கார்த்தி, மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீஸார் மீண்டும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Advertisement
Advertisement
இருவரையும் வரும் 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கார்த்தி மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தயாரிப்புப் பணியை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர். அடுத்த வாரம் குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.
இவ்வழக்கு விசாரணையை விரைந்து முடித்து இருவருக்கும் அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர போலீஸார் திட்டமிட்டு உள்ளனர்.