ஒவ்வொரு பெண்ணுக்கும் அரண்; சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்துக்கு கமல் வாழ்த்து!
தமிழகத்தில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்துக்கு கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்தது பற்றி...
தமிழகத்தில் இன்று (ஜூன் 9) தொடங்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்துக்கு மாநிலங்களவை எம்.பி. கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சி இன்று (ஜூன் 9) நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ”பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு” என்று குறிப்பிட்டு முதல்வர் ஜோசப் விஜய், திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
இதுகுறித்து கமல் ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கமல் ஹாசன்.
Rajya Sabha MP Kamal Haasan has extended his best wishes for the 'Singappenn' (Lioness) special task force initiative launched in Tamil Nadu today (June 9).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.