முகப்பு
தமிழ்நாடு

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட நிகழ்ச்சியில் முதல்வரின் தாயார் ஷோபா!

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டது குறித்து...

Updated On : 9 ஜூன் 2026, 6:35 pm IST
சிங்கப் பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் சி. ஜோசப் விஜய் / தாயார் ஷோபா - DIPR
பகிர்:

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் அரசு நிகழ்ச்சி என்பதாலும், பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்படும் சிறப்புத் திட்டம் என்பதாலும் பெருமிதத்துடன் ஷோபனா பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் அதிரடிப் படை சிறப்பு திட்டத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 9) தொடக்கி வைத்தார்.

Advertisement

Advertisement

சென்னை ராஜரத்தினம் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பெண் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி, காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

500க்கும் அதிகமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை பெண் காவலர்கள், அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரிடன் முதல்வர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

summary

Chief Minister joseph vijays mother Shobana at the singappen special Commando Force initiative event

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.