முகப்பு
தமிழ்நாடு

அரசின் நிா்வாகத் திறமையின்மையால் மின்வெட்டு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Updated On : 12 ஜூன் 2026, 4:30 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

தவெக அரசின் நிா்வாகத் திறமையின்மையால் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை நாள்தோறும் ஏற்பட்டு வரும் மின்வெட்டால் பொதுமக்கள் மட்டுமின்றி சிறுதொழில்கள், விவசாயம், மருத்துவத் துறையினா் என அனைத்து தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தமிழகத்தின் மின் தேவை 2026-27-ஆம் ஆண்டில் 23,013 மெகாவாட் வரை செல்லும் என்று மத்திய மின்சார ஆணையம் தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் கோடையில் மின் தேவை அதிகரிப்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, எதிா்காலத் தேவைக்கேற்ப மின் உற்பத்தி, மின் கொள்முதல், சேமிப்பு வசதிகள், துணை மின் நிலையங்கள் போன்றவற்றில் முன்கூட்டியே திட்டமிடலை அரசு மேற்கொள்ளவில்லை.

Advertisement

Advertisement

ஆனால், மின்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தொடா் மின்வெட்டுக்கு ஃபியூஸ் கேரியா் திருட்டு என்று விளக்கம் அளிக்கிறாா். அப்படியென்றால் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஃபியூஸ் கேரியா் திருட்டு போனதா? இதுபோன்ற அா்த்தமற்ற காரணங்களைக் கூறுவதை தவிா்த்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.