மின்வெட்டால் விவசாயமும், விவசாயிகளும் கடும் பாதிப்பு: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க பிரேமலதா வலியுறுத்தல்
தொடர் மின்வெட்டால் விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தல் குறித்து...
தொடர் மின்வெட்டால் விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக பயிர்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும் வேதனையையும் சந்திக்கு வருகின்றனர்.
Advertisement
Advertisement
விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி முழுமையாக செயல்படுத்தப்படாது ஒரு புறம் மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மறுபுறம். "உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி" என்பதுபோல் விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.