பாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுக
பாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை என்று திமுக தெரிவித்தது பற்றி...
பாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் புதன்கிழமை (ஜூன் 17) தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்ற போது, மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
Advertisement
Advertisement
இது குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:
உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றி அவர்கள் (தவெக அரசு) கவலைப்படுவதில்லை என்பது நமக்குத் தெரியும். பாஜக அரசுக்கு அஞ்சுவதால், மத்திய அரசு மாநிலங்களுக்குப் போதுமான நிதி வழங்கவில்லை என்பது பற்றி அவர்கள் பேசுவதில்லை. பாஜக அரசை விமர்சிக்க அவர்கள் தயாராக இல்லை. அவர்களின் வெள்ளை அறிக்கை, சிறப்பாகச் செயல்பட்ட திமுக அரசை விமர்சிப்பதற்காக மட்டுமே வெளியிடப்பட்டது.
தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இரண்டாவது பெரிய மாநிலமாகும் என்று பொருளாதாரக் குறியீடுகள் காட்டுகின்றன. பொருளாதாரம் மேம்பட்டு, சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இது தேவையுள்ள மற்றும் ஏழை மக்களுக்கு உதவுகிறது. இது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில், தேவையுள்ள குடிமக்களுக்கு உதவுவதே ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கடமையாகும் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
DMK spokesperson T.K.S. Elangovan stated on Wednesday (June 17) that the TVK is not prepared to criticize the BJP government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.