யாரையும் விமர்சிக்க வேண்டாம்! ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன்!
விமர்சனங்கள் குறித்து ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் கட்சியினருக்கு அறிவுறுத்தல்...
தவெக ஆட்சியில் இடம்பெற்றுள்ளது குறித்த விமர்சனங்கள் தொடர்பாக ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் தனது கட்சியினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடித்து வரும் இயக்கமாகும். யாரையும் வசைப்பாடக்கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருக்கிறோம்.
Advertisement
Advertisement
நீண்ட காலமாக தி.மு.கழகத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழமை கொண்டிருந்த நிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை மதித்து, பா.ஜ.க. அனுசரணையுடன் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற பரந்த நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய துணை நின்றிருக்கின்றோம்.
இம்முடிவை தி.மு.க. நண்பர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நண்பர்களும் மறுப்பு தெரிவித்து கடும் சொற்களைப் பயன்படுத்தி வருவது வருத்தத்தை அளிக்கின்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் கட்டிக் காத்த "கண்ணிய அரசியல் பாதை"யில் பயணிப்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.