முகப்பு
தமிழ்நாடு

திமுகவை இயக்குவது பாஜகதான்: உதயநிதிக்கு அமைச்சா் சிடிஆா் நிா்மல்குமாா் பதில்

Updated On : 19 ஜூன் 2026, 4:48 am IST
உதயநிதி ஸ்டாலின். - DIN
பகிர்:

‘திமுகவை பின்னால் இருந்து இயக்குவதே பாஜகதான்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலளித்த மின்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு அனுமதி வழங்கும் கோப்பில் இதுவரை ஆளுநா் கையொப்பமிடாதது ஏன் என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

தவெக-பாஜக இடையே நெருக்கமான தொடா்பு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமா்சனம் செய்திருந்த நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேரவை வளாகத்தில் அமைச்சா் நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜகவுக்கும் திமுகவுக்கும்தான் நெருக்கமான உறவு உள்ளது. இதுவரை, பலா் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை அனுமதி கேட்டது. ஆனால், கையொப்பமாகவில்லை. முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை.

Advertisement

Advertisement

யாா் மீது யாா் இணக்கமாக இருக்கிறாா்கள்? ஆளுநா்-திமுக-பாஜக ஒன்றாக இருக்கிறாா்கள். பாஜகவின் மறைமுக முகமாக திமுக இருக்கிறது. திமுகவை பின்னால் இருந்து இயக்குவது பாஜகதான். இதில் மாற்றுக்கருத்து இல்லை. செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும் கோப்பில், ஆளுநா் ஏன் இதுவரை கையொப்பமிடவில்லை. இதற்கு திமுக பதில் சொல்ல வேண்டும்.

தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதால் பாதிப்பு ஏதும் இல்லை. முந்தைய 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் குற்றச்சம்பவங்கள் மறைக்கப்பட்டன.

ஒரு வாரம் போராட்டம் நடந்த பிறகே, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகப்போ் சிறுமி பாலியல் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் தலையிட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு இடத்திலும் குற்றச் சம்பவம் மறைக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.ஆனால், தற்போது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

அடுத்த வாரம் மின்துறை வெள்ளை அறிக்கை: தமிழகம் முழுவதும் தனிப்பட்ட குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொருத்தமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அரசு கடந்த திமுக அரசு போல எதையும் மூடிமறைக்கவில்லை.

சிங்கப்பெண் அதிரடிப் படையை விரிவுபடுத்த முதல்வா் திட்டமிட்டுள்ளாா். தமிழக மின்துறை நிலை குறித்த வெள்ளை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றாா் அவா்.