வாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு சிகிச்சை! ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கு முதல்வர் உத்தரவு!
அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறித்து...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் 2 பேர் உயிரிழந்தனர். சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை அமைச்சர் பர்வேஸ் குமார் இன்று நேரில் சந்தித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
Thiruvallur Ammonia gas leak Chief Minister joseph vijay orders Aadhav Arjuna and Rajmohan to ensure special treatment
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.