முதல்வரைச் சந்திக்கும் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!
காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ப. சிதம்பரம் அவசர ஆலோசனை செய்வது பற்றி...
திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னையில் ப. சிதம்பரம் வீட்டில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி, வேணுகோபால் ஆகியோருடன் காணொலி வாயிலாக ப.சிதம்பரம் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இதன் தொடர்ச்சியாக கார்கேவின் அறிவுறுத்தலின்படி ப. சிதம்பரம், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசுகிறார்.
மாநிலங்களவைத் தேர்தல் வருகிற மார்ச் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள்(மார்ச் 5) கடைசி நாளாகும்.
அதற்கு முன்னதாக திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு மாநிலங்களவை இடம் இருக்குமா? என்பது இன்று இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரவைத் தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டு வரும் நிலையில் திமுக 28 தொகுதிகள் மட்டுமே வழங்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
P. Chidambaram discussion with Congress executives; he is going to meet CM stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.