திருத்தணி கோயிலில் சீமான்! முருகனை வழிபட்டு தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்!
திருத்தணியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(மார்ச் 23) திருத்தணியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ள நிலையில், அங்குள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
தேர்தல் அறிக்கையை முருகன் சன்னதியில் வைத்து சீமான், வழிபாடு மேற்கொண்டார். அவர் வேல் ஏந்திக்கொண்டு மலையேறி முருகனை வழிப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை திருத்தணியில் ஆரம்பிக்கிறார்.
Advertisement
Advertisement
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது முதல் கட்ட பிரசாரத்தை இன்று (மாா்ச் 23) திருத்தணியில் தொடங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து, நாளை(மார்ச் 24) வேலூர், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர், ஊத்தங்கரை ஆகிய இடங்களிலும், மார்ச் 25-இல் கிருஷ்ணகிரி, சூளகிரி,பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், மார்ச் 26- ஆம் தேதி மேட்டூர், ஓமலூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலும், மார்ச் 27-இல் சங்கராபுரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு வந்தவாசி உள்ளிட்ட இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மார்ச் 28-இல் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி ஆகிய இடங்களிலும் சீமான் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
As Naam Tamilar Party Chief Coordinator Seeman is set to launch his election campaign in Thirutani today (March 23), he visited the Murugan temple there and offered prayers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.