முகப்பு
தமிழ்நாடு

மஹாவீரர் ஜெயந்தி விழா : ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

ராணிப்பேட்டை நகரில் மஹாவீரர் ஜெயந்தி விழாவினையொட்டி, மேளதாளங்கள் முழங்க பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.

Updated On : 31 மார்ச், 2026 at 6:11 AM
ராணிப்பேட்டையில் மஹாவீரர் ஜெயந்தி விழா பல்லக்கு ஊர்வலம்
பகிர்:

ராணிப்பேட்டை நகரில் மஹாவீரர் ஜெயந்தி விழாவினையொட்டி, மேளதாளங்கள் முழங்க பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.

மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (மார்ச் 31) ராணிப்பேட்டை பஜார் தெருவில் உள்ள சுமதிநாத் ஜெயின் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு அரிசியைக் கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து, மஹாவீரர் சிலை மற்றும் திருவுருவப் படம் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் திரளான ஜெயின் சமூகத்தினர் பாடல்களைப் பாடிய படி மேளதாளங்கள் முழங்க ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் உயிர்களை கொல்லக் கூடாது, மது அருந்த கூடாது என மஹாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

summary

Mahavir Jayanti Celebrations: Palanquin Procession in Ranipet!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.