சிலிண்டர் விலை உயர்வு! விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மே 7-ல் ஆர்ப்பாட்டம்
வணிக சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி, எதிர்க்கட்சிகள் மே 7-ல் கண்டன ஆர்ப்பாட்டம்
வணிக சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி, எதிர்க்கட்சிகள் மே 7-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.
வணிக சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரியும், ரயில்வே பணியிடக் குறைப்பைக் கைவிடக்கோரியும் வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிய லெனினிஸ்ட்) கட்சிகள், மே 7 ஆம் தேதியில் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளன.
உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது.
Advertisement
ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சிலிண்டர் விலை உயர்வால் தமிழ்நாட்டில் விடுதிகள் கட்டணத்தை மே 5 முதல் உயர்த்துவதாக விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.