FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிலிண்டர் விலை உயர்வு! விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மே 7-ல் ஆர்ப்பாட்டம்

வணிக சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி, எதிர்க்கட்சிகள் மே 7-ல் கண்டன ஆர்ப்பாட்டம்

வனிக சிலிண்டர் விலை உயர்வு - பிரதிப் படம்
பகிர்:

வணிக சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி, எதிர்க்கட்சிகள் மே 7-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.

வணிக சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரியும், ரயில்வே பணியிடக் குறைப்பைக் கைவிடக்கோரியும் வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிய லெனினிஸ்ட்) கட்சிகள், மே 7 ஆம் தேதியில் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளன.

உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சிலிண்டர் விலை உயர்வால் தமிழ்நாட்டில் விடுதிகள் கட்டணத்தை மே 5 முதல் உயர்த்துவதாக விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

summary

Cylinder Price Hike: VCK and Communist Parties Stage Protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments