முகப்பு
தமிழ்நாடு

என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்: பியூஷ் கோயல் உறுதி

தேர்தலில் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் - கோப்புப் படம்
பகிர்:

தேர்தலில் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசியதாவது, "தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். மேலும், மாநிலத்தின் வளர்ச்சி, தமிழ்க் கலாசாரம், சகோதர, சகோதரிகளின் நலனுக்கான ஆட்சியாக என்டிஏ ஆட்சி இருக்கும்.

திமுக அரசு வெளியேற்றப்பட்டு, மே 4-ல் என்டிஏ அரசு ஆட்சியமைக்கும். ஆட்சியமைப்பதில் சந்தேகமிருந்திருந்தால், தில்லியிலிருந்து இவ்வளவு தொலைவுக்கு நான் வந்திருக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.

Advertisement

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெறவுள்ளது.

summary

TN Polls 2026: Union Minister Piyush Goyal expresses confidence that the NDA alliance will definitely form the government following the elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.