மு.க. ஸ்டாலின், உதயநிதி உள்பட திமுக அமைச்சர்கள் 31 பேர் பின்னடைவு!
தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருவது பற்றி...
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பெரும்பாலான திமுக அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் திமுக அமைச்சர்கள் பலர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
கொளத்தூர் - முதல்வர் மு.க. ஸ்டாலின்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலை - எ.வ. வேலு
தூத்துக்குடி - கீதா ஜீவன்
மன்னார்குடி - டி.ஆர்.பி. ராஜா
திருவெறும்பூர் - அன்பில் மகேஸ்
திருச்சி மேற்கு - கே.என். நேரு
சைதாப்பேட்டை - மா. சுப்பிரமணியன்
காட்பாடி - துரைமுருகன்
மதுரை மத்தி - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
ஆலந்தூர் - தா.மோ. அன்பரசன்
நெல்லை - அப்பாவு
துறைமுகம் - சேகர்பாபு
எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிவி கணேசன், முத்துசாமி, மதிவேந்தன், கோவி. செழியன், காந்தி, சாமிநாதன், நாசர் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இருந்து வருகிறார்.
காலை 10 மணி நிலவரப்படி தவெக 100, அதிமுக 80, திமுக 53 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. திமுக 3-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.