100 -க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து!
குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி...
போக்குவரத்து, பொதுப்பணித் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட 100 -க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாநகராட்சி, ஊரக வளர்ச்சித் துறையில் குறுகிய கால டெண்டர்கள் வெளியிட்ட அதிகாரிகள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட 100 -க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
போக்குவரத்து, பொதுப்பணி, மின்சாரம் உள்ளிட்ட துறைகள் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டர்கள், நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
குறுகிய டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கபட்ட நிலையில் இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
TN govt cancelled short term tenders in various departments
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.