முகப்பு
தமிழ்நாடு

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் மறைவு! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இரங்கல்!

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் மறைவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்...

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி - கோப்புப் படம் | Instagram
பகிர்:

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் நா.மா. முத்துக்கூத்தனின் மகனும், பொம்மலாட்டக் கலைஞருமான மு. கலைவாணன் சென்னையில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) இரவு காலமானார்.

கலைமாமணி விருது பெற்ற மு. கலைவாணன், 6000-க்கும் அதிகமான இடங்களில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பியவராக அறியப்படுகிறது. அவரது மறைவுக்குப் பல்வேறு முக்கிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மு. கலைவாணனின் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

“பொம்மலாட்டக் கலை மூலம் இளையத் தலைமுறையினரிடையே முற்போக்கு கருத்துக்களைப் பரப்பிய பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் அவர்களுடைய மறைவுச் செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.

கலைவாணன் அவர்களது கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் நமது திராவிட மாடல் அரசு அவருக்கு கலைமாமணி விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.

அவரது மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பெரியாரிய இயக்கத்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

summary

Udhayanidhi Stalin has expressed his condolences on the passing of puppetry artist M. Kalaivanan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.