மாமூல் விவகாரம்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து...
செங்கல்சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தவெகவில் இருந்து ஒன்றியச் செயலர் விஜயகுமார் நீக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கணியம்பாடியில் தவெக கிழக்கு ஒன்றிய செயலராக இருந்த விஜயகுமார், கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தவெக தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வைத்து விஜயகுமார் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார்.
இதனால், அவர் வகித்து வந்த ஒன்றிய செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று(மே 26) முதல் விடுவிக்கப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.